கமல் ஹாசன் இப்படி நடந்துப்பார்னு நான் எதிர்பாரக்கல… பாபநாசம் பட நடிகை அதிர்ச்சி பேட்டி!!

636

ஆஷா சரத்..

ஆஷா சரத் ஒரு மலையாள திரைப்பட நடிகை மற்றும் பரதநாட்டிய கலைஞர் ஆவார். இவர் மலையாள படங்களில் மற்றும் தொலைக்காட்சித்தொடர்களிலும் பணியாற்றியுள்ளார். இவர் தனது சினிமா பயணத்தை 2012-ம் ஆண்டு “friday” திரைப்படத்தில் துடங்கினார் .

நடிகை ஆஷா சரத் பல மலையாள படங்களில் நடித்துள்ளார் .மலையாள படங்கள் மட்டும் இல்லாமல் பல மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும் பணிபுரிந்துள்ளார். நடிகை ஆஷா சரத் தமிழில் அறிமுகமான படம் ” பாபநாசம் ” இந்த படத்தில் இவர் தன்னுடைய சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.

தமிழில் அறிமுகமான முதல் படமே வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார். ” பாபநாசம் ” படம் ஒரு ரீமேக் படம் மலையாளத்தில் மோகன் லால் நடித்த ” திருஷ்யம்” படத்தை தான் தமிழில் ” பாபநாசம் ” என்று ரீமேக் செய்தனர் தமிழிலும் இந்த படம் ஹிட் அடித்தது. மலையாள ‘ திருஷ்யம் ‘ படத்திலும் ஆஷா சரத் தான் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இவரின் நடிப்பு கமல் ஹாசனுக்கு பிடித்துபோக . கமல் நடிப்பில் வெளியான ” தூங்கா வனம் ” படத்தில் கமலின் மனைவி காதபத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்ட நடிகை ஆஷா சரத் அதன் பின் ” அன்பறிவு படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகை ஆஷா சரத் தனது சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றுள்ளார். FilmFare , vikatan ,Siima Awards என பல விருதுகளை மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் பெற்றுள்ளார். இவர் நடிப்பதை தவிர பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி ஆகிய நடங்களில் முறையாய் பயிற்சி பெற்ற நடனக்கலைஞனர் . இவர் “ரேடியோ ஆசியா FM ” இல் Radio jockey யாக எட்டு வருடங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளார்.

தற்போது, 48 வயதாகும் இவர் தொடர்ந்து திரைப்படங்களில் வித்தியாசமான ரோல்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல் ஹாசனுடன் பாபநாசம் படத்தில் நடித்த உடனே அடுத்தது தூங்கா வனம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது? இது எப்படி அடுத்தடுத்து நடந்தது என்ற கேள்வி…. ” நான் நிறையபேர் சொல்லி தான் கேள்வி பட்டிருக்கிறேன். அதாவது, கமல் ஹாசன் சார் நடிப்பு ஜாம்பவான் என்று.

ஆனால், உண்மையில் அவருடன் சேர்ந்து பணியாற்றுயபோது தான் அதை நான் உணர்ந்தேன். எனக்கு ஒவ்வொரு காட்சிகளையும் தெளிவாக விளக்கி சொல்லிக்கொடுப்பார். இயக்குனர் சொல்வதை காட்டிலும் கமல் ஹாசன் சார் அந்த காட்சியை மிகவும் உன்னிப்பாக எடுத்து கூறுவார். அவர் சொல்வத்தை கேட்டு நடித்தால் ஒரே டேக்கிலே முடித்துவிடலாம். பாபநாசம் படத்தில் என் நடிப்பை பார்த்துவிட்டு அவரே கூப்பிட்டு எனக்கு தூங்காவனம் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். கமல் ஹாசன் சார் இப்படி செய்வார்னு நான் நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை, அது ஒரு கனவு போல் இருந்தது படமும் வெளியாகி நல்ல பெயர் கொடுத்தது என அவர் கூறினார்.