கட்டழகை கச்சிதமா காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்த ரச்சிதா மகாலட்சுமி!!

3499

ரச்சிதா மகாலட்சுமி..

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களில் நடித்து வருபவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர் பெங்களூரை சேர்ந்தவர். தமிழ் சீரியலில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டதால் இங்கு வந்து செட்டிலாகிவிட்டார். சரவணன் மீனாட்சி சீரியல் இவரை சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

இவர் முதலில் நடித்தது ஒரு கன்னட சீரியலில்தான். அதன்பின் 2011ம் வருடம் பிரிவை சந்திப்போம் என்கிற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது அவருக்கு தொடர்ந்து சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. இளவரசி, மசாலா குடும்பம், சரவணன் மீனாட்சி சீசன் 2, நாச்சியாபுரம் உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்தார்.

ஒருபக்கம் தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களிலும் நடித்து வந்தார். கடந்த பிக்பாஸ் தமிழ் 6வது சீசனிலும் போட்டியாளராக இருந்தார். 91 நாட்கள் அந்த வீட்டில் இருந்து சிறப்பாக விளையாடினார். சீரியலில் இவருடன் நடித்த தினேஷ் கோபாலசாமியை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவருடன் பிரச்சனை ஏற்பட்டு தற்போது தனியாக வசித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு கணவர் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பவதாக சொல்லி காவல் நிலையத்தில் புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஒருபக்கம், கட்டழகை அழகான உடைகளில் காட்டி புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், புடவையில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார்.