இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனுடன் சென்ற மனைவி : விரக்தியில் கணவன் செய்த அதிர்ச்சி செயல்!!

927

அதிர்ச்சி

இந்தியாவில் மனைவி காதலனுடன் சென்றுவிட்டதால், சோகத்தில் இருந்த கணவன் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரபிரதேசத்தின் Kurnool மாவட்டத்தில் உள்ள Jupadu Bunglaw பகுதியைச் சேர்ந்தவர் Bhanoji Rao. இவருக்கும் Jhansi Lakshmi Bai என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு Likhita (7) மற்றும் Madhu (4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இவரது மனைவி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் சோகத்தில் இருந்த Bhanoji Rao நேற்று இரண்டு குழந்தைகளின் தொண்டையிலும் பிளேடால் வெட்டி கொலை செய்துள்ளார். அதன் பின் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இந்த சம்பவம் பொலிசாருக்கு தெரியவந்ததால், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.