உடனே நான் பார்க்க வேண்டும் : உறவினரிடம் அபிராமி கேட்டது என்ன?

1109

அபிராமி

கள்ளக்காதலனுடன் ஓடிப் போவதற்காக தான் பெற்ற குழந்தைகக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குன்றத்துார் பிரியாணி கடையில் பணியாற்றிய ஊழியர், சுந்தரம், என்பவருடன் அபிராமிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. சுந்தரத்துடன் சேர்ந்து வாழ்வதற்காக, கடந்த மாதம், 31 ஆம் தேதி குழந்தைகள் இருவருக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்தும், கழுத்தை நெரித்தும் அபிராமி கொலை செய்தார். இதனையடுத்து பொலிசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் அவர்கள் இருவரையும் விசாரணைக்காக சுந்தரத்துடன் ஒரே வாகனத்தில் பொலிசார் அழைத்துச் சென்றனர், அப்போது சுந்தரம் அபிராமியின் முகத்தை திரும்பி கூட பார்க்கவில்லை என்றும் அபிராமி தான் தொடர்ந்து கதறி அழுததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்லையில் இவருடைய உறவினர் ஒருவர் அனுமதி பெற்று புழல் சிறையில் உள்ள அபிராமியை நேரில் சென்று பார்த்து உள்ளார். அப்போது “நான் தப்பு செய்து விட்டேன்.. என் குழந்தைகளின் நினைவுகள் என்னை வாட்டுகிறது..எனக்கு உடனே குழந்தைகளின் போட்டோவை பார்க்க வேண்டும் என கதறி அழுது உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக அபிராமி சிறையில் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சி செய்துள்ளார் என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.