வசிப்பதற்கு வீடு கிடைக்கவில்லை… போலி கணவர் தேவைப்பட்டது : நடிகை நிலானி கண்ணீர்!!

1084

நடிகை நிலானி

காதலர் லலித்குமார் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தன்னை பற்றிய தவறான தகவல்கள் சமூகவலைதளத்தில் பரப்புவதாக மனம் உடைந்து நடிகை நிலானி தற்கொலை செய்துகொண்டார்.

பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அவரும் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். தறபோது குணமாகி வீடு திரும்பியுள்ள நிலானி அளித்துள்ள பேட்டியில், எனக்கு பலருடன் தொடர்பு இருப்பதாக செய்தி பரப்பினார்கள்.

தொழிலதிபர், தியேட்டர் அதிபருடன் தொடர்பு என்றார்கள்.. நான் சொகுசாக வாழ நினைத்திருந்தால் அப்படி செய்திருக்கலாம். அது உண்மையாக இருந்தால் இப்படி நான் பேசிக்கொண்டிருக்கமாட்டேன்.

நான் இப்போது 30 வீடுகளுக்கும் மேல் வாடகைக்கு கேட்டு சென்றுவிட்டேன், கணவர் இல்லை தனியாக இருக்கிறேன் என கூறினால் வீடு தரமாட்டேன் என்கிறார்கள். அதனால் பொய்யாக ஒரு கணவர் தேவைப்பட்டது, அதை காந்தி உண்மையாக்கிவிட்டார் என கூறியுள்ளார்.