ரட்சிதா மகாலட்சுமி..
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.
இதனிடையே, ரக்ஷிதா தினேஷின் பெயரை தன் கையில் பச்சை குத்தி இருந்திருக்கிறார். டாட்டூ ரச்சிதா கையில் இருந்துள்ளது. ஆனால் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் அந்த டேட்டூவை மறைத்து அதன்மேல் வேறொரு டாட்டூவை ரச்சிதா பதிந்திருக்கிறார்.
இதன் மூலம் தினேஷ் உடன் இனிமேல் வாழப்போவதில்லை என்று மறைமுகமாக ரக்ஷிதா கூறுகிறார் என்றும், இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் தினேஷ் பெயரை எடுத்து விட்டீர்களா அது உண்மையா என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் ரக்ஷிதா அடுத்த கட்டமாக விவாகரத்து முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
View this post on Instagram