காதலனுடன் சென்ற சினேகா : விரக்தியில் பெற்றோர் எடுத்த முடிவு!!

745

காதலனுடன் சென்ற சினேகா

தமிழகத்தில் இளம்பெண்ணொருவர் எதிர்ப்பை மீறி காதலனுடன் சென்றதால், மனமுடைந்த பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி-பாலக்காடு சாலை சக்தி கார்டன் பகுதியைச் சேர்ந்த தம்பதி அகத்தூர்சாமி(63)-சொர்ணலதா(50). இவர்களது மகள் சினேகா(23), சிவகாசியில் கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவரை காதலித்த விடயம் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.

இதனால் சினேகாவை கண்டித்து, கோவையில் உள்ள கல்லூரியில் சேர்த்துள்ளனர். இந்நிலையில், சினேகா தனது காதலரை திருமணம் செய்வதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சினேகா தனது காதலருடன் சென்றுவிட்டார். தனது மகள் தங்களை விட்டு சென்று விட்டதால் மனமுடைந்த அகத்தூர்சாமி-சொர்ணலதா இருவரும் விஷ மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் மாத்திரை சாப்பிட்டதை சொர்ணலதா தனது தங்கைக்கு தெரிவித்த நிலையில், உடனடியாக இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் சிகிச்சைப் பலனின்றி அகத்தூர்சாமி நேற்று முன்தினம் மரணமடைந்த நிலையில், நேற்றைய தினம் சொர்ணலதாவும் மரணமடைந்தார்.

இந்நிலையில், சினேகாவின் கைப்பேசி சுவிட்ச் ஆப்பில் உள்ளதால், அவரது பெற்றோர் மரணமடைந்த தகவலை தெரிவிக்க முடியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.