39 வயதில் கவர்ச்சி காட்டி இளசுகளை மயக்கும் நடிகை பிரியாமணி!!

1260

கோலிவுட் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பிரியா மணி. இவர் கடந்த 2004 -ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்து வந்த இவர், பருத்திவீரன் படத்தில் முத்தழகாக நடித்து பிரபலமானார். இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

கடந்த 2017 -ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன இவர், சினிமாவில் இருந்து சற்று விலகி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வந்தார்.

சமீபத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வசூல் சாதனையை பெற்ற ஜவான் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். அப்படத்தினை தொடர்ந்து இந்தி, தமிழ், கன்னடம், மொழிப்படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். தற்போது 39 வயதை தாண்டியிருக்கும் நடிகை பிரியா மணி இறுக்கமான ஆடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.