சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது : நடிகர் ராதாரவி அதிரடி!!

520

நடிகர் ராதாரவி

’மீ டூ’ மூலம் சின்மயியை யாரோ தூண்டி விடுவதாக கூறிய ராதாரவி, சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிவதாக கூறியுள்ளார்.

வைரமுத்து, அர்ஜூனை அடுத்து நடிகர் தியாகராஜன் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் தியாகராஜன்.

அவருக்கு ஆதரவு அளித்து நடிகர் ராதாரவியும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், சின்மயி நல்ல குழந்தைதான். ஆனால் அவங்களை யாரோ தூண்டிவிட்டுட்டாங்க போல. அதான் அந்தக் குழந்தை அப்படி பேசுது.

அந்த விடயம் எப்போது நடந்தது என்று கேட்டால் சின்மயிக்கு பதில் சொல்ல முடியவில்லை. பாஸ்போர்ட் காணாமல் போனது என்பதை ஒரு காரணமாக சொல்கிறார். இன்று இருக்கும் டெக்னாலஜிக்கு ஒரு சில நிமிடங்களிலேயே நாம் எந்த நாட்டுக்கு எப்போது போனோம் என்பதை கூற முடியும்.

சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது. இதுபோன்ற விடயங்களுக்கு நடவடிக்கை எடுக்க சங்கத்தில் பொறுப்புகளில் இருக்கும் விஷால் முன்வர வேண்டும். இல்லையெனில் மீடூவை வைத்து பிளாக் மெயில் பண்ண தொடங்கிவிடுவார்கள். உடனடி நடவடிக்கை வேண்டும் என கூறியுள்ளார்.