ரெஹானா
வைரமுத்து குறித்து திரைத்துறையில் உள்ள அனைவரும் தெரியும், அவரை ஆரம்பத்திலேயே அடக்கியிருக்க வேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ரெஹானா கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், வைவைரமுத்து பற்றிய பல விடயங்களை பல பெண்கள் முன்கூட்டியே என்னிடம் கூறியுள்ளனர்.
அவர் எப்படிப்பட்டவர் என்பது திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ரகசியம் தான். வைரமுத்துவை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்திருக்க வேண்டும். அவரை, இந்தளவுக்கு வளர விட்டிருக்க கூடாது.
வைரமுத்துவை மட்டும் ஏன், ‘டார்கெட்’ செய்ய வேண்டும். மற்ற பாடகர்கள் மீது எழுந்த புகார்களையும் விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.