நாசாவின் முயற்சியால் செவ்வாய் கிரகத்தில் பறக்கவிருக்கும் ட்ரோன் விமானம்!!

945

செவ்வாய் கிரகத்தில் உள்ள காலநிலை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக ட்ரோன் வகை விமானத்தினை செவ்வாய் கிரகத்தில் பறக்கவிடுவதற்கு நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக குறைந்த எடைகொண்ட ட்ரோன் விமானத்தினை பரீட்சிக்கும் முயற்சியில் நாசா நிறுவனம் இறங்கியுள்ளது.

எதிர்வரும் 2020ம் ஆண்டில் புதிய ரோவர் விண்கலம் ஒன்றினை நாசா செவ்வாய் கிரகம் நோக்கி அனுப்பவுள்ளது.

இவ் விண்கலத்துடன் இணைத்து குறித்த ட்ரோன் விமானத்தினையும் அனுப்ப முடிவு செய்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உள்ள வளிமண்டல அமுக்கமானது பூமியில் உள்ள அமுக்கத்தின் ஒரு சதவீதமாகவே இருக்கின்றது.

எனவே இவ்வாறானதொரு சூழ்நிலையில் ட்ரோன் விமானத்தினை பறக்கவிடுவது சாத்தியமா என்பது தொடர்பிலேயே பரீட்சிப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.