மாரடைப்பால் திடீரென உயிரிழந்த கணவர் : அதிர்ச்சியில் மனைவியும், இரண்டு மகள்களும் செய்த செயல்!!

988

உயிரிழந்த கணவர்

இந்தியாவில் கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததை தாங்கி கொள்ளாமல் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் நெல்லூரை சேர்ந்தவர் முங்கர கொண்டல ராவ் (50). இவருக்கு சுஜாதா என்ற மனைவியும், விஷ்னுவர்தினி (13) மற்றும் சோனிகா என்ற மகள்களும் உள்ளனர். தொழிலதிபரான ராவ் அடிக்கடி வெளியூருக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஹைதராபாத்துக்கு வேலை விடயமாக சென்ற ராவ் அங்குள்ள ஹொட்டலில் தங்கினார். அப்போது திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் ராவ். இது குறித்து ராவின் குடும்பத்தாருக்கு தகவல் தரப்பட்டது.

இதை கேட்டு சுஜாதா, விஷ்ணுவர்தினி மற்றும் சோனிகா அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மூவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்து விஷ்ணுவர்தினி தூக்கில் தொங்கினார்.

சுஜாதாவும், சோனிகாவும் விஷம் குடித்தனர். அப்போது விஷ்ணுவர்தினி வலியால் கத்துவதை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். மூவரும் உயிருக்கு போராடுவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மூவருக்கு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்