அண்ணனை திருமணம் செய்த தங்கை!! காரணம் என்ன தெரியுமா?

951

நைஜீரியாவில் சொந்த அண்ணனை திருமணம் செய்து கொண்டது குறித்து அவரின் தங்கை முதல் முறையாக பேசியுள்ளார். Ekwulobia நகரை சேர்ந்தவர் சியாடிகோபி இசிபிக்பீ(25) பள்ளி ஆசிரியரான இவர் தனது 17 வயதான சொந்த தங்கையை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

கடவுளின் ஆணைப்படியே இந்த திருமணம் நடந்து என சியாடி கூறியுள்ளார். இந்த திருமணத்துக்கு சியாடி குடும்பத்தில் மட்டுமில்லாமல் மொத்த ஊரிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அண்ணனை திருமணம் செய்து செய்து கொண்டது குறித்து இதுநாள் வரை வாய் திறக்காத அவரின் தங்கை தற்போது முதல் முறையாக இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், எங்களை பற்றி பள்ளியில் தவறாக பேசுகிறார்கள் என்பதால் பள்ளிக்கு போவதை நான் நிறுத்திவிட்டேன். அது மட்டுமின்றி பலரும் பலவிதமாக பேசுகிறார்கள் எமக்கு அது பற்றி எந்த கவலையும் இல்லை. இந்த பிரச்சனை முடியும் வரை பொறுமை காப்பேன். கடவுள் என்ன சொல்கிறாரோ அதை தான் செய்தேன், இனியும் அதை தான் செய்வேன் என கூறியுள்ளார்.

எவர் தடுத்தாலும் இது நடக்கும் கடவுளின் ஆணையை உயிர் போனாலும் மீற முடியாது என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.