அதிர்ச்சி சம்பவம்
தான் பெற்றெடுத்த இரண்டரை வயது குழந்தையை தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இராஜபாளையம் வேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த நிறைபாண்டி என்பவர் தனது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த தாய் லட்சுமி, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
நிறைபாண்டியை கைது செய்து, பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இராஜபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.