சாதி குறைந்த அவனை விட்டு வந்துவிடு…உன்னை கொலை செய்துவிடுவேன் : கர்ப்பிணி மகளை கொலை செய்த கொடூர தாய்!!

690

மகளை கொலை செய்த கொடூர தாய்

சாதி மாறி திருமணம் செய்துகொண்ட கர்ப்பிணி மகளை கொலைசெய்து தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் 22 வயது கர்ப்பிணிப் பெண் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக பொலிசிற்கு தகவல் கிடைத்ததையடுத்து அவர்கள் வீட்டிற்கு சென்று உடலை மீட்டனர்.

விசாரணையில், இறந்த பெண்ணின் பெண்ணின் பெயர் ரேணுகா சகரப்பா நாயக் என்பது தெரியவந்துள்ளது. ரேணுகா வேறு சாதியினரை திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல் அவரது தாயார் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரேணுகாவின் கணவர் சகரப்பா நாயக் பொலிசில் அளித்துள்ள புகாரில், நானும், ரேணுகாவும் இரண்டு வருடத்திற்கு முன்பு கல்லூரி படிப்பு படிக்கும்போது சந்தித்து காதலித்தோம்.

இருவரும், வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் ரேணுகாவின் தாயார் மரிவா எங்கள் காதலுக்கு சம்மதிக்கவில்லை. இதனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம்.

திருமணமான நாள் முதல் மரிவா, ரேணுகாவிடம் சகரப்பாவை விட்டு வந்துவிடு இல்லையென்றால் உன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டி வந்தார். ஆனால் ரேணுகா அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார்.

நான்கு மாதங்களுக்கு முன்னால், ரேணுகா தான் கர்பமான விஷயத்தை சொன்னால் தனது பெற்றோர் தனது பேரக்குழந்தைக்காக நம் திருமணத்தை ஏற்றுக்கொள்வார்கள் என தெரிவித்தார்.

அதன்படி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர், சில நாட்களுக்கு பிறகு மரிவா ரேணுகாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது தீபாவளிக்கு வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். வீட்டிற்கு சென்ற ரேணுகாவை அவரது தாய் உட்பட உறவினர்கள் சேர்ந்து கொலை செய்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொலிசார் தரப்பில் கூறுகையில், சாதிப் பிரச்னை காரணமாக பெண்ணின் தாயார் மரிவா, அண்ணன் மல்லிகார்ஜுன் பூஜாரி, மாமா ரமெஷ் ஆகியோர் ரேணுகாவை கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருவருவதாகவும் அவர்கள் மேல் ஐபிசி 302-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சில வாரங்களுக்கு முன்பு ரேணுகாவின் தாயார் மரிவா, அண்ணன் மல்லிகார்ஜுன் பூஜாரி, மாமா ரமேஷ் ஆகியோர் எங்களை சந்திக்க வந்தனர். அப்போது, மரிவா அனைவரும் பழைய விஷயங்களை மறந்து எதிர்காலத்தை பற்றி சிந்திப்போம் என எங்களிடம் கூறினார். அது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

மேலும் இனிப்புகள் வாங்கி வந்த மரிவா நாம் அனைவரும் தீபாவளியை இங்கேயே கொண்டாடுவோம் என கூறினார். தீபாவளி அன்று இரவு நான் கடைக்கு சென்றுவிட்டேன். அப்போது, ரேணுகா வீட்டில் இறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினரிடம் இருந்து எனக்கு செல்போனில் தகவல் வந்தது. வீட்டில் வந்து பார்த்தபோது ரேணுகா இறந்து கிடந்தாள்”. இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், சாதிப் பிரச்னை காரணமாக பெண்ணின் தாயார் மரிவா, அண்ணன் மல்லிகார்ஜுன் பூஜாரி, மாமா ரமெஷ் ஆகியோர் ரேணுகாவை கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருவருவதாகவும் அவர்கள் மேல் ஐபிசி 302-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.