கர்ப்பமடைந்திருப்பதாக கூறிய காதலியை உயிருடன் தீ வைத்து எரித்த சிறுவன்.. அதிர்ச்சி வாக்குமூலம்!!

1222

அதிர்ச்சி வாக்குமூலம்

விசாகப்பட்டினத்தில் கர்ப்பமடைந்திருப்பதாக கூறிய காதலியை, 17 வயது சிறுவன், உயிருடன் தீவைத்து எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தை சேர்ந்த 16 வயது மாணவி கடந்த 7ம் தேதி முதல் மாயமாகி விட்டதாக, சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமியின் காதலன் மற்றும் அவனுடனுடைய நண்பர்கள் அப்பகுதியில் சுற்றி திரிந்ததாக தெரியவந்தது.

அதன் பின் அந்த சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி தான் கர்ப்பம் அடைந்திருப்பதை போல் உணர்வதாக காதலனிடம் கூறியுள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுவன், சிறுமிக்கு கர்ப்பம் கலைக்கும் மாத்திரைகள் கொடுத்துள்ளான். ஆனால் அதனை சிறுமி உண்ண மறுப்பு தெரிவித்திருக்கிறாள்.

இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தால் அவமானமாகிவிடும் என நினைத்த சிறுவன், 7ம் தேதியன்று ஆள் நடமாட்டம் இல்லாத பள்ளி மைதானத்திற்கு சிறுமியை வரவழைத்துள்ளான்.

அங்கு ஒரு இரும்பு கம்பியை கொண்டு சிறுமியின் தலையில் ஓங்கி அடித்துள்ளான். பின்னர் மயங்கி விழுந்த சிறுமியின் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்துள்ளதாக பொலிசாரின் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார் தற்போது சிறுவன் மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த 2 சிறுவர்களை கைது செய்துள்ளனர். மேலும் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக பொலிஸார் காத்திருக்கின்றனர்.