காட்டுக்குள் சிதைக்கப்பட்ட மாணவி : 2 குற்றவாளிகளும் கைது!!

861

காட்டுக்குள் சிதைக்கப்பட்ட மாணவி

தருமபுரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி காட்டுக்குள் வைத்து 2 வாலிபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுக்குள் சென்ற மாணவி சவுமியாவை, சதீஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இரு வாலிபர்கள் பின்தொடர்ந்து சென்று வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதில் அந்த மாணவி தப்பித்து ஓடிவந்துள்ளார். தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் 3 நாட்களுக்கு பிறகு இறந்து போனார்.

இந்த வழக்கில் தேடப்பட்ட சிட்லிங் கிராமத்தை சேர்ந்த சதீஷ் ( 22) என்பவரை பொலிசார் கைது செய்தனர். தலைமறைவான ரமேஷ் (22) என்ற வாலிபர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்தனர்.

இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த ரமேஷ், சேலம் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார். இதையடுத்து அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.