ரத்ததால் பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன் : அதிர்ச்சி தரும் பின்னணி!!

1011

தற்கொலை

தமிழகத்தில் தன்னுடைய சாவுக்கு இவர்கள் தான் காரணம் என்று ரத்ததால் பெயரை எழுதி வைத்து விட்டு, இளைஞர் பள்ளி ஹெட்மாஸ்டர் அறையின் முன்பு தூக்குபோட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கூட்டப்புளியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், அங்குள்ள பள்ளியில் பயிலும் மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதனால் அந்த மாணவியை அடிக்கடி சந்தித்து தன்னுடைய காதலை தெரிவிக்க முயற்சி செய்துள்ளார்.

இதை இப்படியே விட்டால், பிரச்சனை பெரிதாகிவிடும் என்பதால், இது குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோரும் அந்த இளைஞரை கண்டித்துள்ளனர். இருப்பினும் கிறிஸ்டோபர் மாணவிக்கு தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததால் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

விசாரணைக்கு அழைத்துச் சென்ற பொலிசார் அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறிய அவர், நேராகப் பள்ளிக்குச் சென்று அங்குள்ள தூணில் தனது ரத்தத்தைக் கொண்டு தன்னுடைய சாவுக்குக் இவர்கள் தான் காரணமானவர்கள் எனச் சிலரது பெயர்களை எழுதி கையெழுத்துப் போட்டுள்ளார்.

அதன் பின் தலைமை ஆசிரியரின் அறையின் முன்பாகத் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் யாரும் இல்லாத அதிகாலை நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பள்ளியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது