நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டி கொல்லப்பட்ட பெண் : பட்டப்பகலில் வெறிச்செயல்!!

946

வெட்டி கொல்லப்பட்ட பெண்

தமிழகத்தில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்த பெண்ணை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் வேடசந்தூர் அருகே உள்ள சொட்டமாயனூரை சேர்ந்த கணேசனும், அவரது மனைவி மஞ்சுளாவும் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், திண்டுக்கல் சென்றுவிட்டு ஊர்திரும்பிய மஞ்சுளா, பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்தொடர்ந்த வந்த நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால், மஞ்சுளாவை ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே மஞ்சுளா உயிரிழந்தார்.

கொலையாளிகளை கைது செய்யக் கோரி, அவரது உறவினர்கள், திண்டுக்கல் – கரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பட்டப்பகலில் பெண் ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றச் சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.