இத்தாலியில் திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் ஜோடி!!

946

தீபிகா படுகோன்- ரன்வீர் சிங்

பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோன் தனது காதலர் ரன்வீர் சிங்கை இத்தாலியில் இன்று திருமணம் செய்து கொண்டார். ஹிந்தி திரைப்பட உலகில் பிரபல நடிகையான தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் இருவரும் காதலித்து வந்தனர்.

படங்களில் ஒன்றாக நடித்து வந்த இவர்களின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பத்மாவத்’ திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. நட்சத்திர ஜோடியான இவர்களது திருமணம் இத்தாலியில் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இன்று இத்தாலியின் லேக் கோமோ பகுதியில் இவர்களது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணம் கோன்கணி சடங்கு முறைப்படி மந்திரங்கள் முழங்க நடந்தது.

இதில் 30 முதல் 40 விருந்தினர்களுக்கு மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மேலும், பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த திருமணத்தில் புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், நாளை சிந்தி முறைப்படி தீபிகா-ரன்வீர் இருவரும் மீண்டும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். அதன் பின்னர், வரும் நவம்பர் 21ஆம் திகதி பெங்களூருவில் இவர்களது திருமண வரவேற்பும், நவம்பர் 28ஆம் திகதி மும்பை நகரில் மீண்டும் ஒரு திருமண வரவேற்பும் நடைபெற உள்ளது.