அப்பெண்ணின் ஒப்புதலுடன் உறவு கொண்டேன் : Flipkartடை அதிரவைத்த புகார்!!

797

அதிரவைத்த புகார்

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) பின்னி பன்சால் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பின்னி பன்சால்மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்த சம்பவம் பிளிப்கார்ட் நிறுவனத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான அந்த பெண் 2016-ம் ஆண்டு பின்னி பன்சால் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளார்.

இந்தநிலையில் பின்னி பன்சால் பதவி விலகும் முன்பாக தனது நிலையை விளக்கி அவரது தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதில், குறிப்பிட்ட அந்த பெண்ணுடன் தொடர்பு இருந்ததையும், எனினும் நடந்தது பாலியல் வன்முறை அல்ல, ஒப்புதலுன் நடந்த உறவை தவறாக சித்தரித்து தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டதாக அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தான் எந்த பெண்ணையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை என திட்டவட்டமாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கசப்பான விஷயங்கள் தன்னையும், தனது தொழிலையும், குடும்பத்தையும் கடுமையாக பாதித்துள்ளதாக பின்னி பன்சால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.