அவர்களை தவிக்கவிட்டு விடாதீர்கள்… இந்த உலகத்தை விட்டே செல்கிறேன் : இறந்துபோன மாணவியின் உருக்கமான கடிதம்!!

1066

மாணவியின் உருக்கமான கடிதம்

திருச்சி மாவட்டத்தில் நர்ஸிங் படித்து வந்த மாணவி விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜென்சிபிரியா என்ற மாணவி நர்ஸிங் படித்து வருகிறார். இவருக்கு இரவு நேர பணி வழங்கப்பட்டிருந்தது. பணி முடிந்து வீடு திரும்பிய இவர் தூங்கியுள்ளார். வெகுநேரம் ஆகியும் இவர் எழுந்திருக்காத காரணத்தால், பதறிய பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். அவரது வீட்டில் உள்ள படுக்கை அறையில் பொலிசார் சோதனை செய்தபோது, ஊசி போட்டதற்கான சிரிஞ்சி மற்றும் மருந்து பாட்டில் கிடந்தது. மேலும், படுக்கை அறையில் தம்பி, தங்கை மற்றும் தோழிகளுக்கு தனித்தனியாக எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது.

தம்பி, தங்கைக்கு எழுதிய அந்த கடிதத்தில், இனி நீங்கள்தான் அப்பா-அம்மாவை காப்பாற்ற வேண்டும். அவர்களை தவிக்க விட்டு விடாதீர்கள். நான் இந்த உலகத்தை விட்டே செல்கிறேன். அப்பா-அம்மா சொல்வதை கேட்டு நடந்து கொள்ளுங்கள். அதுதான் நல்லது என உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.

தோழிகளுக்கு எழுதிய கடிதத்தில், இந்த உலகத்தில் வாழ்வதற்கு எனக்கு பிடிக்கவில்லை. எனவே, உலகத்தை விட்டு செல்கிறேன்” என கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், இவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.