வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பிய 4 வயது சிறுவன் : நடுவானில் தாய் மடியில் உயிரிழந்த சோகம்!!

1429

4 வயது சிறுவன்

சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பி கொண்டிருந்த 4 வயது சிறுவன நடுவழியிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த யாழ்யா புதியபுரையில் (4) என்ற சிறுவன் தனது குடும்பத்தாருடன் புனித பயணமாக சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு சென்றுள்ளார். பின்னர் குடும்பத்தாருடன் விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பி கொண்டிருந்தான்.

விமானம் கிளம்பிய 45 நிமிடத்தில் சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டது. பின்னர் உடல்நிலை மோசமாக தாயின் மடியிலேயே உயிரிழந்தான். இதையடுத்து விமானமானது அவசர அவசரமாக அபுதாபியில் தரையிறக்கப்பட்டது. இதன் பின்னர் சிறுவனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டதாக அங்குள்ள இந்திய தூதர் தெரிவித்தார்.

இது குறித்து சிறுவனின் மாமா கூறுகையில், யாழ்யாவால் பிறப்பிலிருந்தே பேசவோ, நடக்கவோ முடியாது. அவனை வீல் சேரில் வைத்து தான் அழைத்து செல்வோம். சம்பவத்தன்று அவன் தனது 13 பேர் அடங்கிய குடும்பத்தினருடன் விமானத்தில் பயணித்தான் என கூறியுள்ளார்.