தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்த விமான பெண் ஊழியர்!!

441

விமான பெண் ஊழியர்

இண்டிகோ விமான நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் குவஹாத்தியை சேர்ந்த மவுசாமி கவுதம் (35) இண்டிகோ விமான நிறுவனத்தில் பாதுகாப்பு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார். 3 நாட்கள் பயிற்சிக்காக குருகுரம் வருகை தந்திருந்த மவுசாமி, வெள்ளிக்கிழமையன்று வீடு திரும்புவதாக திட்டமிட்டிருந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு 9:30 மணிக்கு போன் செய்து உணவு கொண்டு வருமாறு கூறியுள்ளார். 10 மணிக்கு சென்ற பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் மவுசாமி கிடந்ததாக விருந்தினர் இல்லத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.

மவுசாமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படாத நிலையில், அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கைக்காக பொலிஸார் காத்திருக்கின்றனர்.

இந்த சம்பவம் அறிந்த இண்டிகோ நிறுவனம், “இன்று காலை குர்கானில் எங்கள் சக ஊழியர் துரதிருஷ்டவசமாக இறந்ததை பற்றி அறிந்து நாங்கள் மிகவும் வருத்தமடைந்தோம். இந்த கட்டத்தில், அவருடைய குடும்பத்தாருக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலையும், பிராத்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.