15 வயது பேத்தியின் திருமணத்தை நிறுத்தி உயிர் துறந்த தாத்தா….. சிறுமியின் தந்தையாலேயே நிகழ்ந்த கொடூரம்!!

442

கொடூரம்

இந்தியாவில் 15 வயது பேத்தியின் திருமணத்துக்கு தாத்தா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சொந்த மகனாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் ஈஸ்வரப்பா. இவரின் மகன் குமார். குமாருக்கு 15 வயதில் மகள் உள்ளார்.

இந்நிலையில் தனது மகளை சுப்ரமணி என்பவரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க குமார் முடிவு செய்தார். திருமணம் செலவுகள் அனைத்தையும் ஏற்று கொள்வதாக கூறிய சுப்ரமணி, வரதட்சணை எதுவும் வேண்டாம் எனவும் குமாரிடம் கூறியுள்ளார்.

ஆனால் 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பது குற்றம் என சிறுமியின் தாத்தாவும், குமாரின் அப்பாவுமான ஈஸ்வரப்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் திருமண வேலைகளை குமார் செய்து வந்தார்.

இந்நிலையில் சிறுமிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக மர்ம நபர் ஒருவர் குழந்தைகள் நல வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து குமார் வீட்டுக்கு வந்த அதிகாரிகள், சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தனர்.

இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது. இத்திருமணத்தை எதிர்த்த ஈஸ்வரப்பா தான் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார் என நினைத்த ஈஸ்வரப்பாவும், சுப்ரமணியனும் அவருடன் சண்டை போட்டுள்ளனர்.

அப்போது பெற்ற தந்தையான ஈஸ்வரப்பா தலை மீது கல்லை போட்டு கொன்றார் குமார். இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் குமாரை அவர்கள் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுப்ரமணியை தேடி வருகிறார்கள்.