விளையாட்டாக விஷப்பாம்பை கையில் பிடித்த நபர் : அடுத்த நடந்த விபரீத சம்பவம்!!

801

விபரீத சம்பவம்

சென்னை பூந்தமல்லியில் விளையாட்டாக விஷ பாம்பை பிடித்த நபர் திடீரென மயக்கமடைந்து தரையில் சுருண்டு விழுந்ததால் பரபரப்பட்டு ஏற்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ராமர் என்பவர் சுவற்றில் பெயின்டிங் வேலை செய்துகொண்டிருந்துள்ளார். அப்போது சாலையில் சென்ற 8 அடி நீள விஷ பாம்பை பார்த்து பொதுமக்கள் அனைவரும் நாலாபக்கமும் சிதறி ஓடியுள்ளார். இதனை கண்ட ராமர், துணிச்சலுடன் சென்று பாம்பை கையில் பிடித்துள்ளார். அப்போது திடீரென அந்த விஷப்பாம்பு கையில் கடித்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ராமர், உடனே அந்த பாம்பை ஓங்கி சுவற்றில் அடித்தார். அடுத்த சில நிமிடங்களிலே அவரும் மயக்கமடைந்தவாறு தரையில் சுருண்டு விழுந்தார். இதனையடுத்து மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.