ஸ்ரீதேவி மரணத்தால் இணைந்த குடும்பம்!!

915

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் மகன் நடிகர் அர்ஜுன் கபூர் செய்த காரியம் பாலிவுட்காரர்களை வியக்க வைத்துள்ளது.

போனி கபூரின் முதல் மனைவிக்கு பிறந்த பிள்ளைகள் நடிகர் அர்ஜுன் கபூர், அன்சுலா கபூர் ஆகியோர் நடிகை ஸ்ரீதேவி தங்கள் தந்தையை பிரித்து அழைத்துச் சென்றதால் அர்ஜுன் அவருடன் பேசியதே இல்லை எனவும் கூறப்படுகின்றது.

ஆனால் ஸ்ரீதேவி இறந்த பிறகு அர்ஜுன் ஆளே மாறிவிட்டார். தந்தையுடன் அவர் பேசத் துவங்கியதுடன் ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி, குஷி கபூர் மீதும் அர்ஜுன் பாசமாக உள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மும்பையில் உள்ள தனது வீட்டில் போனி கபூர், குஷி, ஜான்வி ஆகியோருக்கு அர்ஜுன் விருந்து கொடுத்துள்ளார்.

இந்த விருந்தில் அண்மையில் துபாயில் திருமணம் செய்து கொண்ட நடிகர் மோஹித் மர்வா தனது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார்.

அர்ஜுன் தனது தந்தை, மற்றும் ஜான்வி, குஷிக்கு ஆறுதலாக இருப்பதை பார்த்து பாலிவுட்காரர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.