தந்தை இறந்த சோகத்தில் இருந்த மகன்… ஆறுதல் கூறி தலையை வருடிய குரங்கு : நெகிழ்ச்சி சம்பவம்!!

452

கர்நாடகா மாநிலத்தில் துக்க வீட்டிற்கு சென்ற குரங்கு, தந்தையை இழந்த மகனுக்கு ஆறுதல் கூறிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகாவின் நரகுந்தா தாலுகாவைச் சேர்ந்தவர் நாகனகவுடா பாட்டீல் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதனால், இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அனைவரும் அவரது வீட்டில் குவிந்தனர்.

அனைவரும் அமர்ந்திருக்கையில் திடீரென அழையா விருந்தாளியாக வந்த குரங்கு, இறந்துபோனவரின் உடலுக்கு அருகில் சிறிது நேரம் அமர்ந்திருந்து அஞ்சலி செலுத்தியது.

பின்னர், பாட்டீலின் மகனுக்கு அருகில் சென்று அவரது தோள் மீது ஏறி ஆறுதல் கூறி, அவரது தலையை வருடிவிட்டு யாருக்கும் தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து சென்றுவிட்டது.

குரங்கின் இந்த நெகிழ்ச்சி செயலால், சிலநேரம் அங்கு துக்கத்தை மறந்து அதனை வேடிக்கை பார்த்துள்ளனர்.