தங்கைக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைக்கு சாட்சி கேட்பானா ஒரு ஆண் : லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்!!

918

லட்சுமி ராமகிருஷ்ணன்

பிரபலமான ஆண்கள் மீது, பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை எழுப்பும்போது இந்தச் சமூகம் அந்தப் பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்பது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பாலியல் குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வாங்கி தர நீதிமன்றம் இருக்கிறது, அல்லது இந்த அசிங்கத்தையெல்லாம் பெண்கள் ஏன் வெளியே சொல்ல வேண்டும் என கேள்வி எழுப்புகிறார்கள்? பாதிக்கப்பட்டவர்கள் ஏன் அசிங்கப்படனும்? இதுதான் எனது கேள்வி.

நம்ம வீட்டில் ஒரு பெண், ‘அண்ணா, ஒரு ஆளு என்கிட்ட அத்துமீறி நடக்கப் பார்த்தார்’னு சொன்னா அந்த ஆண் நம்புவான் இல்லையா. சொந்த தங்கைக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைக்கு சாட்சி கேட்பானா ஒரு ஆண். கேட்க மாட்டான் இல்லையா.

தங்கையால் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஆண், சமூகத்தில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், தங்கை சொல்வதைத்தான் நம்புவான். அதே போன்று, இது நம்ம வீட்டு பெண் என்கிற மனப்பான்மை வந்தால், `மீ டூ’ என்று சொல்கிற பெண்களை இந்தச் சமூகம் நம்பும் என கூறியுள்ளார்.