உன் மனைவி அழகாக இருக்கிறார் என நண்பரிடம் வர்ணித்த நபர் : அடுத்து நேர்ந்த விபரீதம்!!

1075

நேர்ந்த விபரீதம்

தமிழகத்தில் மனைவியின் அழகை நண்பர் வர்ணித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நடந்த கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் இடுதட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது நண்பர் பாரதி என்பவருடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றார். சாமி தரிசனம் முடிந்து இருவரும் விடுதி ஒன்றில் வாடகைக்கு தங்கி மது அருந்தினர்.

அப்போது இருவரும் பல்வேறு விடயங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, உன் மனைவி மிகவும் அழகானவர். அவரிடம் தகராறு செய்யாதே. உன்னைப்போல் எனக்கு மனைவி கிடைத்திருந்தால் அவரை அருமையாக வைத்திருப்பேன் என பாரதி கூறியுள்ளார்.

அதைப்பற்றி பேச வேண்டாம். வேறு எதாவது பேசலாம் என்று ராமச்சந்திரன் கூறியுள்ளார். இருப்பினும் பாரதி மீண்டும், ராமச்சந்திரன் மனைவி பற்றியே பேசினார்.

இதனால் ராமச்சந்திரன் ஆத்திரம் அடைந்து என் மனைவியை பற்றி எப்படி என்னிடமே வர்ணித்து பேசலாம் என கேட்டு தகராறு செய்தார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த பாரதி, ராமச்சந்திரனை சரமாரியாக அடித்து கொன்றார். பின்னர், உறவினர்களுக்கு போன் செய்து ராமச்சந்திரன் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறினார்.

ராமச்சந்திரனின் சகோதரர் வாசுதேவன் இந்த சாவில் சந்தேகம் இருக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் பாரதி, ராமச்சந்திரனின் உறவினர்களை சமாதானம் செய்து அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்தார். சாவில் சந்தேகம் இருக்கிறது என்று கூறி வந்த வாசுதேவன், இது குறித்து பொலிசில் புகார் அளித்தார். அதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

பாரதியிடம் பொலிசார் விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த அவர் பின்னர் ராமச்சந்திரனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டர். இதனையடுத்து பொலிசார் அவரை கைது செய்தனர்.