22 வருட பாசப்போராட்டம் : வெளிநாட்டில் இருந்து வந்து பெற்ற தாயை கண்டுபிடித்த பெண்!!

899

22 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் இருந்து தத்தெடுக்கப்ட்ட ஸ்பானிஷ் பெண், தன்னை பெற்ற இந்திய தாயை கண்டுபிடித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து கடந்த 22 வருடங்களுக்கு 14 மாத குழந்தையான ஜீனத் என்பவரை ஸ்பானிஷ் நாட்டை சேர்ந்த Antich Marti Raman – Garica Batacia Fores என்ற தம்பதியினர் தத்தெடுத்து சென்றனர்.

இதனையடுத்து தனது 10 வயதில் ஜீனத் தன்னுடைய வளர்ப்பு பெற்றோர்களுடன், பெற்ற தாயை சந்திப்பதற்காக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். ஆனால் அதற்கான பலன் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் ஸ்பானிஷ் நாட்டிற்கு திரும்பினார்.

அங்கு உளவியல் பட்டப்படிப்பு படித்து வந்த அவர், கடந்த 3 வருடங்களாக உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அதில் கிடைத்த வருமானத்துடன் சேர்த்து, நண்பர்களின் உதவியுடன் இந்தியாவிற்கு தாயை தேடி மீண்டும் வருகை தந்துள்ளார்.

இந்த நிலையில் தன்னுடைய தாயை சந்தித்த உடனே ஜீனத் கட்டி தழுவி பேச முயற்சித்தும் இந்தி தெரியாத காரணத்தினால் கண்ணீரின் வழியாகாவே பாசத்தை வெளிப்படுத்தினர்.

பின்னர் இதுகுறித்து பேசிய ஜீனத்தின் தாய், தனக்கு 21 வயதாகும்பொழுது உறவினர் ஒருவரின் தொடர் பாலியல் தொல்லையால் தான் கர்பமடைந்ததாக கூறினார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்படைந்ததால் வீட்டில் ஒதுக்கினர். ஆனால் கர்ப்பத்தை கலைக்க என் மனதில் இடம் கொடுக்கவில்லை. நான் கூலி வேலை செய்துகொண்டே குழந்தையை கசப்படுத்த விரும்பவில்லை என கூறினார்.

இதனையடுத்து பேசிய ஜீனத், எனது தாயின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அடுத்த முறை இந்தியா வரும்பொழுது நிச்சயமாக இந்தி கற்றுக்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.