பாலத்திற்கு அடியில் கிடைத்த பிரபல நடிகையின் உடல் : கணவரே கொலை செய்தாரா?

628

பிரபல நடிகை

பிரபல நடிகையின் உடல் ஆற்று பாலத்தின் அடியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஓடியா ஆல்பம் நடிகை சிம்ரன் சிங்கின் உடல் நேற்று மகாநதி ஆற்றின் குறுக்கே Goira Matha என்கிற இடத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு பாலத்தின் அடியில் கிடந்துள்ளது. சிம்ரன் இதுவரை பல சம்பல்பூர் ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார்.

உடலை கண்டதும் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீஸ் பார்த்தபோது அவரது முகம் மற்றும் தலையில் அதிகம் காயங்கள் இருந்துள்ளது.

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அவரை கொலை செய்தது யார், என்ன காரணம் என போலீசார் துப்பறிந்து வருகின்றனர். நடிகையின் குடும்பத்தினர் அவரின் கணவர் தான் கொலை செய்துள்ளார் என புகார் கூறியுள்ளனர்.