பிரித்தானியாவில் 7 வயதுச் சிறுமியை கொலை செய்த 15 வயதுச் சிறுமி!!

528

சிறுமி கொலை

பிரித்தானியாவில் 15 வயதுடைய சிறுமியால் கொலை செய்யப்பட்ட தன்னுடைய 7 வயது மகள் குறித்து அவளின் தாய் இது தான் உன்னுடைய கடைசி கிறிஸ்துமஸ் கேட்டி ரப் என்று உருக்கமாக பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரித்தானியாவில் Katie Rough(7) என்ற சிறுமி பூங்காவில் தினமும் தன்னுடைய 15 வயது பெண் நண்பருடன் விளையாடுவது வழக்கம்.

அந்த வகையில் குறித்த 15 வயது பெண்ணுடன் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று காரணம் தெரியாமல் கோபம் கொள்ளும் அந்த 15 வயது சிறுமி Katie Rough-ஐ கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அவளது மார்பு பகுதியை முற்றிலும் சிதைத்தார்.

இந்த சம்பவத்தை பார்த்த பூங்காவிற்கு வந்த நபர் அதிர்ச்சியடைந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்து வந்த பொலிசார் குறித்த பெண்ணை கைது செய்து, Katie Rough உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் Katie Rough -யை அந்த பெண் கொலை செய்துவிட்டு உடலை கடுமையாக சிதைத்திருப்பதாக தெரியவந்தது. இந்நிலையில் இது குறித்து தொடர் விசாரணையில் கொலை செய்த பெண் 2016 ஆம் ஆண்டில் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி குறித்த பெண்ணிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். அவர் சிறுமி என்பதால் அவர் பெயர் வெளியில் குறிப்பிட வேண்டாம் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 25-ஆம் திகதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது. Katie Rough குறித்து அவரது தாய் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான தகவல் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், Katie Rough நீ கொண்டாடிய கடைசி கிறிஸ்துமஸ் இதுதான். உனக்கு இந்த நிலைக்கு காரணமானவருக்கு 5 வருடம் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என வேதனையுடன் கூறியுள்ளார்.