மாமா நீ பேசிய அந்த ஒரு வார்த்தை! 30 நாட்களில் காதல் மனைவியின் சோக முடிவு : கதறும் கணவன்!!

702

கதறும் கணவன்

திருப்பூர் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் திருமணமா ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் முருகேசன் – பத்மாவதி. இவர்களது மகள் சூர்யா, முதலிபாளையம் சிட்கோவில் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த அண்ணாநகரை சேர்ந்த பழனிசாமியின் மகன் நவீன்குமாரை(26), சூர்யா காதலித்தார். இருவரும் கடந்த 4 மாதங்களாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சூர்யா வீட்டை விட்டு வெளியேறி நவீன்குமாரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் சூர்யாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே அவரை நவீன்குமார் மருத்துவனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார்.

இது தொடர்பாக கணவன்–மனைவிக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டியில் யாரும் இல்லாதபோது சூர்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தனது மனைவி இறந்துகிடந்ததை பார்த்து கணவன் நவீன் கதறியுள்ளார். சூர்யாவின் இடது கையில், ‘நான் உன்னை விட்டு தனிமையில் பிரிந்து செல்ல மனம் இல்லை. என்னுடன் வந்து விடு’ என எழுதி வைத்து உள்ளார். வங்கி பாஸ்புத்தகத்தில், ‘‘நவி மாமா நீ பேசிய அந்த ஒரு வார்த்தை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் செல்கிறேன். என்னுடன் வந்து விடு’’ என எழுதி வைத்து இருக்கிறார்.

சூர்யாவுக்கு திருமணம் ஆகி ஒரு மாத காலம் ஆவதால் ஆர்.டி.ஒ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. திருமணம் ஆகி ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.