54 வயது மாமனாருடன் தவறான பழக்கம் : இறுதியில் நடந்த சோக சம்பவம்!!

511

சோக சம்பவம்

வேலூர் மாவட்டத்தில் மூத்த மாமனாருடன் திருமணமான பெண் தவறான பழக்கம் கொண்ட காரணத்தால் இறுதியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தனசேகர் – ஜெயந்தி தம்பதியினருக்கு ஸ்ரீலட்சுமி, மகாலட்சுமி என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தன. ஜெயந்திக்கும், 54 வயதான அவரது பெரிய மாமனார் கோபாலகிருஷ்ணனுக்கும் இடையே தவறான பழக்கம் இருந்துள்ளது.

இந்தநிலையில், கோபாலகிருஷ்ணன், ஜெயந்தி மற்றும் அவரது 2 பெண் குழந்தைகளை கடந்த 27ஆம் தேதி, வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றார். வேளாங்கண்ணி சென்று பல நாட்கள் ஆகியும், வீடு திரும்பாததால், ஜெயந்தியின் கணவர் தனசேகர் மற்றும் அவரது உறவினர்கள் அச்சம் அடைந்தனர்.

வேளாங்கண்ணியில் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கிய ஜெயந்தி மற்றும் கோபாலகிருஷ்ணன், மகள் மகாலட்சுமி முகத்தின் மீது தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து ஆந்திரா சென்றுள்ளனர்.

பொலிசார் தங்களை தேடுவதை அறிந்த அவர்கள், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். தவறான பழக்கத்தால் ஒருமகளை கொலை செய்துவிட்டு மற்றொரு மகளுடன் ஜெயந்தி ரயில் முன் பாய்ந்த சம்பவம் நெல்வாய் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.