பேஸ்புக் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற பெண் : பதறிய நண்பர்கள்!!

471

பேஸ்புக் நேரலை

மகாராஷ்டிராவில் பேஸ்புக் நேரலையில் எலி மருந்து குடித்து பெண் ஓருவர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லடூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 31 வயதான வ்ருஷாலி காம்ப்ளே. இவர் இன்று காலை 8.30 மணிக்கு தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்துள்ளார்.

அதில் பேசிய அவர், கடந்த சில நாட்களாகவே அவருடைய நிறுவனத்தில் சிலர் காயப்படுத்தியதால் வேலையை ராஜினாமா செய்துள்ளார். அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் விரக்தியில் தற்கொலை செய்வதாக பேசிக்கொண்டே எலிமருந்தை குடித்துள்ளார்.

இதனை பார்த்த பதறிப்போன நண்பர்கள் சிலர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வ்ருஷாலியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வ்ருஷாலி உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.