குழந்தையுடன் சீமான்
தைப்பூசத்தையொட்டி தமது வீட்டில் முருகன் குடில் அமைத்து குடும்பத்துடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேல்வழிபாடு நடத்தினார்.
தைப்பூசநாளில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில், சென்னை, மதுரவாயல் உறவுகள் சார்பாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் குடில் அமைத்து முருகனின் திருவுருவச் சிலையும் வேலும் நிறுவி வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று தமிழர் மெய்யியல் முறைப்படி உறுதிமொழியேற்று வேல்வழிபாடு செய்தார்.
இந்த வழிப்பாட்டில் சீமான் மனைவி கயல்விழியும் கலந்து கொண்டார். அப்போது சமீபத்தில் தம்பதிக்கு பிறந்த குழந்தையை கயல்விழி கையில் வைத்திருந்தார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.