நான் போர்வையுடன் உல்லாசமாக இருந்தேன் : அதிரவைத்த இளம்பெண்!!

552

அதிரவைத்த இளம்பெண்

பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் போர்வையுடன் உல்லாசமாக இருந்ததாகவும், விரைவில் அதை திருமணம் செய்து கொள்ளப் போவதாவும் அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த பாஸ்கேல் செலிக் எனும் பெண் பல ஆண்டுகளாக ஒரே போர்வையை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் அந்த போர்வையின் மீது அவருக்கு காதல் வந்துள்ளது. இதையடுத்து அவர் போர்வையை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், எனக்கும் எனது போர்வைக்குமான உறவு என்பது, வெகு நீண்டகால உறவு. மிகவும் நெருக்கமானதும், உறுதியானது. என் போர்வையுடன் நான் உல்லாசமாக இருந்திருக்கிறேன். எனது போர்வை ஒரு நம்பகமான ஒரு நண்பன்.

அது எப்போதும் எனக்காகவே இருக்கும். என்னை அணைத்துக் கொள்ளும். எனது போர்வையை தான் மிகத் தீவிரமாக காதலிக்கிறேன். எனது திருமணத்துக்கு எல்லோரும் நிச்சயம் வர வேண்டும். ஆடம், பாடல், கொண்டாட்டம் என என் திருமணம் மிகவும் குதூகலமாக இருக்கும் என்று கூறியுள்ளார். பாஸ்கேல் செலிக்குக்கும் அவரது போர்வைக்கும் பிப்ரவரி 10-ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

தனக்கு பிடித்தமான பொருளை திருமணம் செய்யும் முதல் நபர் அல்ல இவர். ஏற்கனவே ஒரு பெண் பெர்லின் சுவரையும், டோக்கியோவைச் சேர்ந்த ஒருவர் தனக்கு பிடித்த ஹோலோகிராமையும் திருமணம் செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.