61 வருட பாசப்போராட்டம் : 103 வயது தாயை கண்டுபிடித்த 81 வயது மகளின் நெகிழ்ச்சிக் கதை!!

1113

81 வயது மகளின் நெகிழ்ச்சிக் கதை

அயர்லாந்து நாட்டை சேர்ந்த 81 வயதான எய்லீன் மெக்கென் தனது 81 வயதில் தன்னை பெற்றெடுத்த தாயை கண்டுபிடித்துள்ளார்.

மெக்கெனக்கு சிறுவயது இருக்கும்போதே தனது தாயை பிரிந்துள்ளார். 19 வயதில்தான் தான் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட குழந்தை என தெரியவந்துள்ளது. தான் இறப்பதற்கு தன்னை பெற்றெடுத்த தாயை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆசை மெக்கனுக்கு இருந்துள்ளது.

61 ஆண்டுகளாக தனது தாயை தேடிவந்துள்ளார், தனக்கு தற்போது 81 வயதாகிவிட்ட நிலையில் தனிமையில் வசித்து வரும் மெக்கென், கடந்த ஆண்டு அயர்லாந்து நாட்டின் பிரபல வானொலியில், தனது தாய் மற்றும் தனது தாயை பிரிந்த மருத்துவமனை குறித்த விவரங்களை தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சில நாட்கள் முன்னர் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மருத்துவர், உங்கள் குடும்பத்தை எனக்கு தெரியும் என கூறியுள்ளார். இதைக்கேட்டதும் மகிழ்ச்சியில் உரைந்த மெக்கென் அவரது உதவியுடன் தனது குடும்பத்தை தேட ஆரம்பித்துள்ளார். பல்வேறு தேடல்களுக்குப் பின்னர் தனது குடும்பத்தை கண்டுபிடித்துள்ளார்.

அயர்லாந்தின் பெதானி குடியிருப்பில் 103 வயதான மெக்கெனின் தாய் வசித்துள்ளார். தனது தாயுடன் பேசிய மெக்கேன், நான் உயிருடன் இருந்தது உங்களுக்கு ஏன் தெரியவில்லை. ஏன் தெரியவில்லை” என ஆழ்மனதில் இருந்து அழுகையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்”.

ஆனால் அவர் பேசியது எதையும் அவரது தாயால் கேட்க முடியவில்லை. வயது முதிர்வால் அவருக்கு கேட்கும் திறன் இழந்துவிட்டது. இதனால், மெக்கென் கூறியதற்கெல்லாம் அவரது தாய், “எனக்கு கேட்கவில்லை என பதிலளித்துள்ளார். போனில் பேசிய மெக்கேன் தனது தாயை நேரில் சந்திக்கும் ஆவலில் இருக்கிறார்.