பப்ளிசிட்டிக்காக நானே போட்டோ லீக் செய்தேனா? ஹன்சிகா அதிரடி பதில்!!

612

ஹன்சிகா அதிரடி பதில்

நடிகை ஹன்சிகாவின் சில அந்தரங்க புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது போன் மற்றும் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இந்த புகைப்படங்கள் லீக் ஆனது என அவரே கூறினார்.

ஆனால் இந்த புகைப்படங்களை பப்ளிசிட்டிகாக ஹன்சிகாவே வெளியிட்டார் என ஒரு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர். அதுமட்டுமின்றி ஹன்சிகா படங்களிலேயே பிகினியில் நடித்துள்ளார். இப்போது போட்டோ லீக் ஆனதில் என்ன பிரச்சனை என்றும் சிலர் விமர்சித்தனர்.

இதுபற்றி ஹன்சிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். “நான் அமெரிக்க செல்லும்போதிருந்தே என் போனில் சில வித்தியாசத்தை உணர்ந்தேன். அதன்பின் என் அந்தரங்க போட்டோக்கள் வெளியானது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவை நான்கு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைபடங்கள். என் ட்விட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டதை உணர்ந்து டெக்னிகல் டீமிடம் சொன்னேன்.”

“பப்ளிசிட்டிகாக நானே போட்டோ வெளியிட்டேன் என சிலர் ட்ரோல் செய்கின்றனர். அதை பார்த்து மனமுடைந்துவிட்டேன். போட்டோ லீக் ஆனது ஒருபுறம் வருத்தம் அளித்தது, அதைவிட இவர்கள் என்னை விமர்சிப்பது எனக்கு அதிகம் வேதனையை அளித்தது.

நான் கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படி செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆரம்பம் முதலே நான் சமூக வலைத்தளங்களில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாதராண ஒருவர் போல தான் இருக்கிறேன்” என மேலும் ஹன்சிகா கூறியுள்ளார்.