10 நிமிடம் தாமதமானதால் மனைவியை விவாகரத்து செய்த கணவன்!!

474

விவாகரத்து செய்த கணவன்

தாய் வீட்டிற்கு சென்ற மனைவி 10 நிமிடங்கள் தாமதமாக வந்தால் அவரின் கணவர் முத்தாலக் கூறிய விவகாரம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபாவில் முத்தாலக்கிற்கு எதிரான சட்டம் சமீபத்தில்தான் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் ஒருவர் தன் மனைவிகு தலாக் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் எட்டா என்கிற பகுதியில் ஒரு பெண் தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். நோய்வாய்பட்ட தனது பாட்டியை பார்க்க அவர் சென்றதாக தெரிகிறது.

வீட்டிற்கு வந்த கணவர் இதுபற்றி கேள்விப்பட்டு தனது மனைவிக்கு போன் செய்துள்ளார். இன்னும் 30 நிமிடங்களில் நீ இங்கு வரவேண்டும் என கட்டளையிட்டுள்ளார். எனவே, அவர் மனைவி வேகவேகமாக தாயின் விட்டிலிருந்து கிளம்பி வந்துள்ளார்.

ஆனால், 10 நிமிடம் தாமதமாகி விட்டது. எனவே, கோபமடைந்த கணவன், மனைவியின் சகோதரனின் செல்போனில் தொடர்பு கொண்டு ‘தலாக்’ செய்து விட்டார். இதைக்கண்டு அப்பெண் அதிர்ச்சி அடைந்தார்.

ஏற்கனவே வரதட்சனை கேட்டு தன் கணவன் தன்னை சித்ரவதை செய்து வருவதாக புகார் கூறியுள்ள அப்பெண், இந்த விவகாரத்தில் தனக்கு சட்ட பாதுகாப்பு வேண்டும் எனவும், அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.