கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் யோகி பாபு ரகசியமாக செய்த செயல் : புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆர்த்தி!!

772

நடிகர் யோகி பாபு

நடிகர் யோகி பாபுவுக்கு இந்த வருடம் அதிர்ஷ்டமான வருடமாக கூறப்படுகின்றது. அமைதியாக விளம்பரம் இன்றி தன் அம்மா பெயரில் பங்களா கட்டி குடியேறியுள்ளார்.

இன்று கோலிவுட்டின் பிசியான நகைச்சுவை நடிகர் என்றால் அது யோகி பாபு தான். அவர் கையில் 15க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. அவர் தனது சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார். கோடிகளில் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யோகிபாபு சென்னையில் பெரிய பங்களா கட்டியுள்ளார்.

அந்த பங்களாவுக்கு தனது அம்மா விசாலாட்சியின் பெயரை வைத்துள்ளார். புதுமனை புகுவிழாவை சத்தமில்லாமல் ரகசியமாக நடத்தியுள்ளார். அந்த விழாவுக்கு சென்ற நடிகை ஆர்த்தி அங்கு எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

யோகிபாபுவின் வீட்டை பார்த்தாலே பிரமாண்டமாக உள்ளது. அதிர்ஷ்டகாரர் என்றும் பலர் யோகிபாபுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.