தத்தெடுத்த மகள்களுடன் 600 முறை பாலுறவு கொண்ட தந்தை : அதிர்ச்சி சம்பவம்!!

641

அதிர்ச்சி சம்பவம்

நான்கு மகள்களை தத்தெடுத்த கனடாவைச் சேர்ந்த ஒருவர், அவர்களில் இரண்டு பேரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணை தொடர்ந்த நிலையிலும், அவரது மற்ற இரண்டு மகள்கள் தொடர்ந்து அவரிடமே இருக்க அனுமதிக்கப்பட, அவர்களுடனும் 300 முதல் 600 முறை வரை பாலுறவு கொண்டிருக்கிறார் அந்த நபர்.

தத்தெடுக்கப்பட்ட இளம்பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பொலிஸ் விசாரணையும் கைதும் நடந்த பின்னரும் சிறுவர் நல அதிகாரிகள் இரண்டு மகள்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுடனேயே தங்க அனுமதித்தது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முதல் இரண்டு மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதும் அவர்கள் இருவரும் அரசு காப்பகங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அடுத்த இரண்டு மகள்களையும் துஷ்பிரயோகம் செய்யத்தொடங்கியிருக்கிறார் அந்த நபர்.

முதல் இரண்டு மகள்களை ஆறு ஆண்டுகள் துஷ்பிரயோகம் செய்த அந்த நபர், வாய்வழி உறவு முதல் உடலுறவு வரை பலவிதத்தில் உறவு கொண்டிருக்கிறார். அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, அடுத்த இரு மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அடுத்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாலுறுப்புகளை தவறாக தொடுதல், வாய்வழி பாலுறவு முதல் ஆசனவழி உறவு வரை அந்த பெண்களுக்கு அந்த நபர் செய்யாத கொடுமையே இல்லை. தன்னுடன் மட்டும், 300 முதல் 600 முறை வரை தனது வளர்ப்புத் தந்தை பாலுறவு கொண்டதாக, மூத்த மகள் தெரிவித்திருப்பது நீதிபதிகளை பெரும் அதிர்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தனது மகள்களுடன் பாலுறவு கொள்வதற்காகவே ஒரு ஷெட்டை தனியாக அமைத்து, அங்கே மெத்தைகளை போட்டு வைத்து, அங்கு தனது மகள்களுடன் விதம் விதமாக பாலுறவு கொள்வாராம் அந்த வளர்ப்புத் தந்தை. வழக்கு தொடர்பாக அவர் ஜூலை மாதம் 3ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கும் நிலையில், அவரது வழக்கறிஞரை தொடர்பு கொண்டபோது அவர் கருத்தேதும் தெரிவிக்க மறுத்து விட்டார்.