கட்டிலுக்கு அடியில் படுத்திருந்த சிறுத்தை : வீட்டுக்குள் நுழைந்த குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

840

குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பின் வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் பகுதியில் வசிப்பவர் ராயன். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பியபோது, வீட்டுக்குள்ளிருந்து உறுமல் சத்தம் கேட்டுள்ளது.

சந்தேகத்தில் கட்டிலுக்கு அடியில் பார்த்தபோது, சிறுத்தை படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்வாசல் வழியாக சிறுத்தை வீட்டுக்குள் புகுந்துள்ளது. உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியேறி கதவைப் பூட்டிவிட்டு வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். வனத்துறையில் கால்நடை மருத்துவர் இல்லாத காரணத்தால் சிறுத்தையைப் பிடிப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.