மனைவியை 40 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த கணவன்!!

439

கொடூரமாக கொலை

இந்தியாவில் மனைவியை 40 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் Gurugram நகரத்தில் இருக்கும் Ashok Vihar பகுதியைச் சேர்ந்த தம்பதி Pankaj Bhardwaj(28)- Vanshika Sharma.

இந்த தம்பதிக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில மாதங்களிலே Vanshika Sharma மற்றும் அவரது தாய் Pankaj Bhardwaj-ஐ தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி அவர் மீது தேவையில்லாத வீண் பழிகளை எல்லாம் கூறியுள்ளனர். இதனால் இவர்கள் மீது ஆத்திரத்தில் இருந்த பான்கஜ் சம்பவதினத்தன்று மனைவியை கத்தியால் சுமார் 40 முறை குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இந்த தகவல் பொலிசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தலைமறைவாக இருந்த Pankaj Bhardwaj-ஐ கைது செய்தனர்.

இவர் மட்டுமின்றி இந்த கொலைக்கு உதவிய Nashim Ahmed(39) என்பவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். மனைவி மற்றும் மாமியாரின் டார்ச்சர் தாங்க முடியாதன் காரணமாகவே அவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.