காட்டுக்குள் 5 ஆண்களால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வீடியோ வெளியாகி பரபரப்பு!!

976

சிறுமி பாலியல் வன்கொடுமை

பீகாரில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வீடியோ இணையதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட இந்திய மாநிலங்களில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி அதனை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஜெனாபாத் என்ற பகுதியில் உள்ள காட்டுக்குள் வைத்து 5 ஆண்கள், சிறுமி ஒருவரை ஆடையை இழுத்து துன்புறுத்துகின்றனர். அந்த சிறுமி என்னை விட்டுவிடுங்கள் என கதறியும் யாரும் கேட்கவில்லை.

கும்பலாக சேர்ந்து கொண்டு அந்த சிறுமியை துன்புறுத்துவதை அதில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.