காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து 5 நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரன்!!

647

கொலை செய்த கொடூரன்

திருவள்ளூர் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை நபண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி பள்ளிக்கு சென்று திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை பொலிசில் புகார் அளித்திருந்த நிலையில், மாணவி எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் தேடுதலை பொலிசார் கைவிட்டனர்.

இந்நிலையில் கீழக்கரை கிராமத்தில் உள்ள ஏரியில் கடந்த 11 ஆம் திகதி எலும்புக்கூடாக மாணவியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நான்கு தனிப்படை அமைத்து பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சங்கரா என்பவனை பொலிசார் கைது செய்தனர்.

சங்கரா அந்த மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார், இதனை மாணவி ஏற்க மறுத்த காரணத்தால் ஆத்திரம் அடைந்த சங்கரா மாணவியை கடத்தி சென்று தனது நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து 5 நாட்களாக மாந்தோப்பு வீட்டில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஏனைய நான்கு பேரை பொலிசார் தேடி வருகின்றனர்.