கழிவறையில் கமெராவை வைத்து திருநங்கை செய்த செயல்: நேர்ந்த விபரீதம்!!

557

நியூசிலாந்தில் ஆண்கள் கழிவறைக்குள் சென்ற திருநங்கை, மாணவர் சிறுநீர் கழிப்பதை தனது செல்போன் கமெராவில் படம் பிடிக்க முயன்ற நிலையில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள ஷொப்பிங் மாலுக்கு வனிசா காக்காயி என்ற திருநங்கை சென்ற நிலையில் ஆண்கள் கழிவறைக்குள் சென்றுள்ளார்.

அங்கு மாணவர் ஒருவர் சிறுநீர் கழித்து கொண்டிருந்த போது அவருக்கு பக்கத்தில் சென்ற வனிசா தனது செல்போன் கமெராவை எடுத்து இளைஞரை புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர், வனிசாவை பிடிக்க முயல அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வனிசாவிடம் விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் இது நீதிமன்ற வழக்காக மாற்றப்பட்டது.

நீதிமன்ற விசாரணை தற்போது முடிந்துள்ள நிலையில் வனிசாவால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு $300 பணம் கொடுக்க வேண்டும் எனவும், இது போன்ற மோசமான நடத்தையில் ஈடுபட்டதற்காக தனியாக இன்னொரு $300 பணத்தை அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதோடு நீதிமன்ற செலவாக $130 கட்டவும், வனிசாவின் செல்போனை உடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.