உயிர் பிழைக்க 10 சதவீதமே வாய்ப்பு : சிறுவனுக்கு மறுவாழ்வு தந்த மருத்துவர்கள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

462

நெகிழ்ச்சி சம்பவம்

இந்தியாவில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிர் பிழைப்பதற்கு 10 சதவீதம் தான் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்ட நிலையில், அரசு மருத்துவர்களின் சிகிச்சையால் சிறுவனுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், போபால் பகுதியைச் சேர்ந்தவர் ஜெத்தேந்தர் பர்மன். இவருக்கு ராகுல் என்ற ஐந்து வயது மகன் உள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தமிழகத்தின் திருப்பூரில் தங்கி கூலி வேலை செய்வதற்காக போபாலில் இருந்து சிலருடன், தன்னுடைய குடும்பத்தையும் ஜெத்தேந்தர் ரயிலில் அழைத்துவந்தார்.

வேலூர் மாவட்டம், காட்பாடியை ரயில் கடந்தபோது, சிறுவன் ராகுலுக்கு திடீரென காய்ச்சலுடன் வலிப்பு ஏற்பட்டது. அடுத்த சில சிறுவனின் மூக்கில் இரத்தம் வழிந்தது. அதன் பின் சிறுவன் திடீரென்று மயங்கி விழுந்தார்ன். இதனால் இரயில்வே பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக சிறுவனை மீட்டு அருகிலிருக்கும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிறுவனை மருத்துவர்கள் பரிசோதித்த போது, சிறுவனுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அபாயக் கட்டத்தை எட்டியிருப்பதால் உயிர்பிழைப்பது கடினம். 10 சதவிகிதம் மட்டுமே காப்பாற்ற வாய்ப்பிருப்பதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியில் பெற்றோர் உறைந்து நிற்க, உடனடியாக மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் ராகுல் அனுமதிக்கப்பட்டான்.

மருத்துவமனை டீன் சாந்திமலர் மேற்பார்வையில், குழந்தைகள் நலத்துறைத் தலைவர் மருத்துவர் தேரணிராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், சிறுவனைத் தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்துவந்தனர்.

இந்நிலையில், சிறுவன் ராகுல் குணமடைந்துள்ளான். இன்னும் சில நாள்கள், சிகிச்சை பெற்றபிறகு, சிறுவன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவான் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 10 சதவீதமே உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பட்ட சிறுவனை மருத்துவர்கள் காப்பாற்றியதால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.