நடிகை சந்தியா கொலை பாணியில் வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் : சிசிடிவியில் சிக்கிய காட்சி!!

609

வெட்டப்பட்ட பெண்

லக்னோவில் கேட்பாரற்று கிடந்த பையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெண்ணின் தலை, கை மற்றும் கால் பகுதிகள் மட்டும் பாலிதீன் கவரில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது.

ராம் மனோகர் லோஹியா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் அருகில் குறித்த பை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர் 40 வயதான தொழிலாளி என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இருப்பினும், ஏனைய உடல் பாங்கள் இல்லாத காரணத்தால் சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். நீண்ட நேர விசாரணைக்குப் பின்னர் அந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கடிதத்தில், சிவப்பு கலர் மையில் எழுதப்பட்டிருந்தது.

மேலும், அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கமெராவை ஆய்வு செய்ததில் நடுத்தர வயதுள்ள நபர் பேக்கை சுமந்து வருவது பதிவாகியுள்ளது. அவரே இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

சமீபத்தில் சென்னையில் சந்தியா என்பவர் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டு அவரது உடல்பாகங்கள் குப்பையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய குறிப்பிடத்தக்கது.